God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




121
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்
அப்போதென் துக்கம் மறப்பேன்
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசை யாவும் சொல்லுவேன்
என் ஆவல் நிறைவேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்று தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்டு வருவார்
பேர் அசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்
ஆனந்தக் களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத கிரீடம் சூடுவேன்


© www.myjesus.in . 2014