God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




18
எந்தன் நாவில் புதுப் பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்

ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - அல்லேலுயா

பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய்
என்னைத் தேற்றினார்

வாதை நோயும் வந்த போதும்
வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம்
நீ£க்கி மீட்டிட்டார்

சேற்றில் வீழ்ந்த என்னை அவர்
தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம்
கொண்டு மாற்றினார்

இவ்வுலகப் பாடு என்னை
என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண
காத்திருக்கிறேன்



© www.myjesus.in . 2014