God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
191
எங்கும் புகழ் ஏசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர் கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரை
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்
|