God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




201
கரை ஏறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டு போவேனோ

ஆத்துமா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடே அண்டவா
வெறுங்கையனாக உம்மை
கண்டு கொள்ளல் ஆகுமா

ஆத்துமக்கள் மீது வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்
காலங்கழித்தோர் அன்னாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

தேவரீர் கைத்தாங்க சற்றும்
சாவுக்கஞ்சி கலங்கேன்
ஆயினும் நான் பலன் காண
உழைக்காமற் போயினேன்

வானாள் எல்லாம் வீணாளாக
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ

பக்தரே உற்சாகத்தோடே
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்து சேர உழைப்பீர்


© www.myjesus.in . 2014