God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
201
கரை ஏறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டு போவேனோ
ஆத்துமா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடே அண்டவா
வெறுங்கையனாக உம்மை
கண்டு கொள்ளல் ஆகுமா
ஆத்துமக்கள் மீது வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்
காலங்கழித்தோர் அன்னாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்
தேவரீர் கைத்தாங்க சற்றும்
சாவுக்கஞ்சி கலங்கேன்
ஆயினும் நான் பலன் காண
உழைக்காமற் போயினேன்
வானாள் எல்லாம் வீணாளாக
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ
பக்தரே உற்சாகத்தோடே
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்து சேர உழைப்பீர்
|