God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
205
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
பனி படர்ந்த மலையின் மேலே பார்க்க முடியுமா
கனி நிறைந்த சோலை நடுவே காண முடியுமா
ஓடுகின்ற அருவியெல்லாம் தேடியலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே
வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியிலே வீசும் காற்றே நீ
கர்த்தன் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ
கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண் விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்
|