God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
207
எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே
எனக்காய் மரித்த என் இயேசு நல்லவரே
கஷ்டங்களில் என் துணை அவரே
கண்ணீரெல்லாம் துடைப்பார்
மரணத்தின் பாதையில் நடந்தாலும்
மாறாத வாக்கு உண்டு
இருள்சூழ்ந்து பாரங்கள் நெருக்கினாலும்
இமைப் பொழுதே மறந்தவர்
இருக்கின்றவராக இருக்கின்றாரே
என்றும் என் ஜெபம் கேட்பார்
வியாதியால் சரீரம் வாடினாலும்
வல்லமை தாங்கிடுமே
ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே
ஆற்றுவார் அன்பினாலே
பரலோகில் உம்மையல்லால் யாரெனக்கு
புவியில் விருப்பம் வேறில்லை
|