God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




262
கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி , மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்



© www.myjesus.in . 2014