God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




27
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

மீன் கேட்டால் பாம்பைக்
கொடுப்பார் உண்டோ
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூடச் செய்திடார்
பிதாவே உம் ஆவி அருள்வீர்

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என்று எழுதும்


© www.myjesus.in . 2014