God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
280
உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார்
ஜாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் (2)
சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை (2)
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உன்மைத் தள்ளிடுவாரோ (2)
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் (2)
அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிடவே
வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள் (2
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்விடுவாய் (2)
வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே
|