God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
40
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா (7)
ஆ. ..ஆ. ..ஆ..மேன்
எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கென்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வின் ஜோதியும் நீரே
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றென்றும் மாறாது
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
|