God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




85
கண்களை ஏறெடுப்பேன் - மாமேருனேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணிலா ஒத்தாசை என்றனுக்கே வரும்

காலைத் தள்ளாடவொட்டார் -
உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாடவொட்டார்
வேலையில் நின்றிஸ்ர வேலரைக் காத்தவர்
` காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்

பக்க நிழல் அவரே எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே

எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்


© www.myjesus.in . 2014